இலங்கையில் மத்திய மாகாணத்தின் தலைநகர் என வர்ணிக்கப்படும் கண்டி நகருக்கு சென்றால் இயற்கையில் அழகை பார்த்து ரசிக்கக் கூடியதாய் அமைந்துள்ளது.
இங்கு இடம்பெற்ற ஒரு ஆச்சரியமான அமானுஷ்யமான கதை தான் இது..........
கண்டி நகரில் பிரசித்த பெற்ற சிங்கள பாடசாலையொன்று........ (பெயரை குறிப்பிட கூடாது என்பதற்காக பெயரை குறிப்பிடவில்லை)
இந்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்ற மிக அழகான ஒரு மாணவி.
பலர் இவளிடம் காதலிப்பதாக கூறியும் அதனை மறுத்து அப்பாடசாலையிலேயே கல்வி கற்று வந்தால்.
விதி யாரை விட்டது.
இப்படி 16 வருடங்கள் காதலில் விழாத இவள். தரம் 11இல் ஒரு மாணவனின் வலையில் சிக்கினாள்.
இருவரும் பல மாதங்கள் காதலித்து வந்த நிலையில், குறித்த மாணவனினால் இம்மாணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.
இதையடுத்து கர்ப்பமுற்ற மாணவி, தன்னை மனக்குமாறு குறித்த மாணவிடம் கோரிய போது, அதனை மறுத்துள்ளான் அந்த மாணவன்.
இவள் ஒவ்வொரு நாளும் அம்மாணவனை விடாது, தன்னை மனக்குமாறு கோரி வந்ததை அடுத்து..... அந்த மாணவன்
தனது நண்பர்களை கொண்டு அந்த மாணவியை பயமுறுத்த எண்ணி.
தனது நண்பர்களிடம் இவ்விடயத்தை கூறியுள்ளான்.
மாணவனின் நண்பர்கள் தாம் அம்மாணவியை பயமுறுத்துவதாக கூறி பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஒரு நாள் மாலை வேளை.......
மாணவி தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் நேரம்....
மாணவியின் வீடு ஒரு தனிமை நிறைந்த வீதியிலேயே உள்ளது.
குறித்த வீதியை அடைந்த மாணவியை....... அந்த மாணவனின் நண்பர்கள் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட குறித்த மாணவியில் அழகில் மயங்கிய நண்பர்கள்...
மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த கொலை செய்துள்ளனர் அந்த மாணவனின் நண்பர்கள்.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில மாதங்களின் பிறகு.........
குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையில் வகுப்பறையில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வகுப்பறையில் குறித்த மாணவியில் கதிரைக்கு அருகில் ஒவ்வொரு நாளும் இரத்தம் வடிந்துக் கொண்டே இருக்குமாம்.....
இந்த இரத்தம் சிறிது காலம் தொடர்ந்து வடிந்துள்ளதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மாணவியின் இரத்த கண்ணீர் என்பதே பாடசாலை ஆசிரியர்கள் கருத்தாக அமைந்தது.
திங்கள், 26 ஜூலை, 2010
இரத்தக் கண்ணீர்!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் PM 6:44 லேபிள்கள்: arun, ghost, kandy, ranjan arunprasadh, tamilghostஞாயிறு, 27 ஜூன், 2010
லொறியில் மோதிய பெண்!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் AM 7:21 லேபிள்கள்: arun, ghost, ranjan arunprasadh, tamilghostபேய்களின் நடமாட்டத்தை அதிகளவில் வாகன சாரதிகளுக்கே காண்கின்றனர். காரணம் அவர்கள் தான் ஒவ்வொரு நாளும் வேறுப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு சாரதிக்கும் பல்வேறு அனுபவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
இப்படி எனது நண்பரொருவர் வாகன சாரதியாக கடமையாற்றி வருகின்றனர்.
இவர் அதிகளவில் வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.
அநுராதபுரத்தில் தனது வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்த எனது நண்பன், இரவு நேரத்தில் மற்றுமொருவருடன் லொறியில் வந்து கொண்டிருந்துள்ளார்.
ஒரு இடத்தில் வைத்து எனது நண்பனுக்கு அருகிலுள்ள நபர் தீடிரென கத்தியுள்ளார்.
வாகனத்திற்கு முன்னால் பெண்ணொருவர் நிற்பதாகவும், வாகனத்தை நிறுத்துமாறும் கூறி சத்தமிட்டுள்ளார்.
ஆனால் சாரதிக்கு ஒன்றும் தெரியவில்லை. வாகனத்திற்கு முன்னால் யாரும் நிற்பதுவும் தெரியவில்லை.
இவர் வாகனத்தையும் நிறுத்தாது வேகமாக வந்து விட்டார்.
அப்போது அருகிலிருந்த நபர் எனது நண்பனை பார்த்து.
நான் சொன்ன நேரமே லொறியை நிறுத்தியிருந்திருக்கலாம் தானே. இப்போ பெண்ணை மோதிவிட்ட தானே. அவள் இறந்திருப்பா என கூறியுள்ளார்.
இதை கேட்ட எனது நண்பனுக்கு ஒரே ஆச்சரியம். யாரும் இருக்கவில்லையே. இவன் ஏன் இப்படி சொல்லனும். என பல கேள்விகள் மனதில்.
அப்போது ஒன்றுமே புரியவில்லை எனது நண்பனுக்கு.
லொறியை வேகமாக செலுத்திய எனது நண்பனுக்கு மற்றுமொரு ஆச்சியமான செயல் அப்போதே நிகழ்ந்துள்ளது.
என்ன தெரியுமா. வாகனம் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கு வந்துக் கொண்டே உள்ளதாம். ஆனால் அந்த பாதை எனது நண்பனுக்கு நன்றாக பரீட்சீயமான பாதை.
அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அந்த பெண் மோதுண்டதாக கூறப்பட்ட இடத்திற்கே வாகனம் எப்படியோ வருதாம். புரியவில்லை எனது நண்பனுக்கு.
ஏதோ நடக்கின்றது என மனதில் எண்ணம். வாகனத்தை அப்படியே ஓர் இடத்தில் நிறுத்தி விட்டு தூங்கி விட்டார்களாம்.
மீண்டும் காலையில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் எனது நண்பனும் அவனுடைய நண்பனும்!
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
நான் இருந்த முன்னைய வீட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேறு வீட்டிற்கு சென்று விட்டோன்.
அந்த வீட்டில் எனக்கு நடந்த ஒரு சம்பவம் தான் இது.
நான் அன்று வீட்டிற்குச் செல்லும் போது இரவு 10 மணி. இரவு உணவை சாப்பிட்டு விட்டு வீட்டிலுள்ள அனைவருடனும் கதைத்துக் கொண்டிருந்தேன்.
அன்று எனது நண்பனொருவனும் வீட்டிற்கு வந்திருந்தான்.
மறுநாள் எனக்கு அதிகாலை 2 மணிக்கு எழும்ப வேண்டும். காரணம் வேலைக்கு போக.
எனினும், சுமார் 12 மணி இருக்கும் எனக்கு தூக்கம். நான் அப்போது தான் நித்திரைக்குச் சென்றேன்.
எமது கையடக்கத் தொலைபேசி பாட்டை பாட தொடங்கியது. எழுந்து பார்த்தால் 2 மணி. சரி எழுந்து விடுவோம் என நினைத்து எழுந்தேன்.
எனது நண்பன் என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தான். சில விநாடிகளில் எழுந்தான்.
அப்போது நான். இன்னும் நேரம் இருக்கு தூங்குடா? என கூறி வேளையிலேயே, எமது மற்றைய தொலைபேசியிலிருந்தும் சத்தம் வர தொடங்கியது.
தொலைபேசியை எடுக்க மறுப்பக்கம் திரும்பி, மீண்டும் எனது நண்பனை பார்த்தேன்.
அங்கு என் நண்பனை காணவில்லை. எனக்கு ஒரே அதிர்ச்சி. என்ன நடந்திருக்கும். எங்கே போயிருப்பான். என பல கேள்விகள் மனதில்.
ஒரு பக்கம் மனதில் சிறிய பயம் கூட.
பின்னர் மற்றைய அறையில் சென்று பார்த்தேன். என் நண்பன் அங்கு நல்ல நித்திரை.
அப்போது தான் ஏதோ நடக்கிறது என புரிந்துக் கொண்டேன். அந்த வீட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன.
அவற்றை எதிர்வரும் பதிவுகளில் தர எண்ணியுள்ளேன்.
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
பேய்களின் ஆட்சிகள் என்றே இந்த காலத்தை சொல்ல முடியும். காரணம் பேய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரினால் கேட்கக் கூடியதாய் உள்ளது.
பேய்களின் நடமாட்டம் அதிகமான இரவு வேளைகளில் தான் உள்ளது என பலர் கூறி கண்டுள்ளேன். ஏன் எனது அனுபவங்களும் கூடுதலாக இரவு நேரங்களில் தான்.
இன்றும் நானும் எழுதப்போவது இரவு நேரத்தில் இடம்பெற்ற உண்மை பேய் கதை தான்!
இலங்கை பிரசித்த பெற்ற ஓர் இடம். அங்கு பேய்களின் நடமாட்டம் இன்று உள்ளது என கூறுவதினால் ஊரின் பெயரை கூற விரும்பவில்லை.
அங்கு ரயிலில் இடம்பெற்ற ஓர் உண்மை சம்பவம் தான் இது.
அந்த பிரதேசத்தில் அதிகமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வார்களாம். அதனால் அந்த பிரதேசத்தில் ரயில் செல்லும் போது ஓட்டுனர் பயந்து தான் ரயிலை செலுத்துவார் என கூறுகின்றனர்.
இது இப்படி இருக்க தண்டவாளத்தை பார்த்துக் கொள்ள ஓருவரை கடமையில் அமர்த்தியிருப்பார்கள் அல்லவா. அவருக்கு தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு நாள் இரவு தனது கடமைகளுக்காக தண்டவாளத்தை பார்த்துக் கொண்டு அந்த வழியாக நடந்துச் சென்றுள்ளார்.
அவர் ரயில் செல்லும் பாலத்தை அண்மித்தார். அப்போது அந்த பாலத்தில் ஒருவர் தண்டவாளத்தை உடைத்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.
யார் அது என கேள்வி எழுப்பிக் கொண்டே அருகில் சென்றுள்ளார். இவர் அருகில் செல்ல செல்ல அவர் இவரை பார்க்காது தமது வேளையை செய்துக் கொண்டுள்ளார்.
இவருக்கு கோபம் தான் சொல்வதை கேட்கவில்லை என. அருகில் சென்று தமது பலத்தை முழுமையாக உபயோகித்து அவனை தாக்கியுள்ளார்.
ஆனால் அவர் தாக்கியது திருடனை அல்ல. இரும்பு பாலத்தை தான். அவ்விடத்தி;ல் இருந்தவனை காணவில்லையாம். அவரது கை அன்றுடன் சரி!
இன்று அவர் தமது வலது கையை இழந்து தான் வாழ்ந்துக் கொண்டுள்ளார்…….
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
பேய்கள் என்றாலே கூடுதலாக தனிமையான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலேயே இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர்.
அப்படி தனிமையான இடங்களில் பேய்களை கண்டவர்கள் அதிகம் இருக்கின்றனர். அப்படி தான் எனக்கு தெரிந்த, இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற ஓர் இடம்! அந்த ஊரில் பேய்களின் நடமாட்டம் சற்று அதிகமாக தான் இருக்கும்.
அந்த ஊரில் இடம்பெற்ற ஓர் சம்பவத்தை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.
குறித்த ஊரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் ஒரு சிறிய கிராமம்.
அந்த கிராமத்தில் தேயிலை செறிந்த காணப்படுவதுடன், வாழைத் தோப்புக்களும் காணப்படுகின்றன.
அத்துடன், அந்த ஊரில் சிறிய நீர் வீழ்ச்சியொன்றும் உள்ளதுடன், அதனை சூழ மூங்கில்கள் கூட்ட கூட்டமாக காணப்படுகின்றமை அனைவரது உள்ளங்களையும் கவரும் ஒரு இயற்கை காட்சி.
ஆனால், அந்த இயற்கையில் தான் மறைந்திருக்கும் ஓர் உண்மை சம்பவம்.
அந்த மூங்கில்கள் காணப்படும் இடத்தில் ஒரு தனி வீடு! அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை.
மனிதர்கள் வாழ வேண்டிய வீட்டில் பிராணிகள் தான் வாழ்ந்து வருகின்றன.
இதற்கான காரணம் தான் அந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அழகான அம்சமான குடும்பம்.
இவர்களில் அந்த வீட்டில் சிறிது காலமே வாழ்ந்தனர். அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
இப்படி பல பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அந்த குடும்பத்தில் தலைவியை தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து அந்த வீட்டில் இன்றும் அந்த பெண்ணின் நடமாட்டம் இருக்கின்றதாக தெரிவிக்கின்றனர் அப்பிரதேச மக்கள்.
இந்த பெண்ணின் கொலையை அடுத்து வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர் அந்த வீட்டின் உரிமையாளர்கள்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்காக ஒருவர் மாத்திரமே வந்து தங்கியுள்ளார். முதலாம் நாள் இரவு. இந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறமை அவருக்கு தெரியாது. (யாருக்கும் தெரியாது)
நேரம் சுமார் 10 மணி இருக்கும். கடையில் வாங்கி வந்த இறைச்சியுடன் கூடிய உணவை உண்டு விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார் குறித்த நபர்.
11 மணியளவில் ஒரு சிறிய சத்தம் கேட்டுள்ளது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் பெண்ணொருவர் அழுவது போல சத்தம் கேட்டுள்ளது. யார் இந்த இடத்தில் இந்த நேரத்தில் அழுவது என மனதில் நினைத்து படுக்கையிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.
பார்த்தால் யார் இல்லை. பின்னர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.
சரியாக நள்ளிரவு 12 மணி.
அய்யோ என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண்ணின் குரல். இவர் எழுந்து கையில் கிடைத்த இரும்பொன்றை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
மீண்டும் அதே குரல் வீட்டிற்குள் கேட்டுள்ளது. வீட்டிற்குள் வந்து பார்த்தால், வெளியில் அந்த பெண்ணின் சத்தம். இப்படி மாற்றி மாற்றி சத்தம் கேட்டுள்ளது.
அப்போது தான் இவருக்கு ஓர் சந்தேகம்! இது நிச்சயம் பெண்ணின் குரல் இல்லை. இது ஆவிகளின் நடமாட்டமாக தான் இருக்கும் என மனதில் நினைவு.
அப்படியே வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னர் அன்று முழுநாளும் அவர் தூங்கவில்லையாம். அன்றிரவே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த நாள் வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்று விட்டாராம்.
அன்றிலிருந்து இன்று வரை அந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை.
இன்றும் அந்த வீட்டில் சத்தங்கள் கேட்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சனி, 15 ஆகஸ்ட், 2009
நமது வெற்றியின் செய்தி பிரிவில் கடமையாற்றும் லெனினின் உண்மை கதை!
இவரும் இவருடைய நண்பர்களும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் புஸ்ஸல்லா பகுதியிலுள்ள போபிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் அந்த மரண சடங்கு வீட்டிற்கு வேன் ஒன்றிலேயே சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் வேனில் ஹட்டனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போது, வேனில் ஒரே பேய் கதைகளை கதைக் கொண்டே சென்றுள்ளனர்.
அப்போது அவருடைய நண்பனொருவன் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த இடத்தில் இரவு வேளையில் செல்லும் வாகனங்கள் தீடீரென நின்று விடுவதாக கூறியுள்ளார்.
இவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு, பார்ப்போம் இன்று நாங்கள் அதே பாதையின் ஊடாக தானே செல்ல போறோம். என்ன நடக்குதுனு பார்ப்போம் என தெரிவித்துள்ளனர்.
சரியான அதிகாலை 2 மணி, குறித்த இடத்தை வேன் நெருங்கியுள்ளது.
யாரும் பாதையில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில். பாதை அமைதியாக பேய்களை வரவேற்பது போல் காட்சியளித்தது.
குறித்த இடம். அவன் கூறியது போலவே எஞ்சின் தீடீரென செயலிழந்து வேன் வீசுப்பட்டு, உரு சுவரில் மோதி நின்றதாம்!
வேனில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின்விளக்குகளும் அனைந்து, குறித்த இடமே இருளாயிற்றாம்.
சாரதி வேனை மீண்டும் ஸ்டாட் செய்ய முயற்சித்தும், வேன் ஸ்டாட் ஆகவில்லையாம்.
சுமார் அதே இடத்தில் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்;துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த வேனில் இருந்த வேளையில் யாரோ வேனை தட்டுவது போலவும், வேனை தள்ளுவது போலவும் உணர்வுகள் தென்பட்டதாம்!
அன்று விடிந்தது. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அப்போது அந்த பிரதேசத்தில் சென்றவர்களிடம் இவர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது பிரதேச மக்கள் தெரிவித்ததாகவது:- இது அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற 5ஆவது சம்பவம் எனவும், இந்த பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் காலை வேளையில் வேன் ஸ்டாட் செய்தவுடன் ஸ்டாட் ஆகிவிட்டதாம்!
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
ஒரு தனியான பாதை, யாரும் அந்த பாதையில் மாலை 6 மணிக்கு பின்னர் செல்ல மாட்டார்கள். (இன்றும்)
மின்விளக்குகள் கூட அந்த பாதையில் இல்லை. மாலை 6 மணிக்கு பின்னர் இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்படும் அந்த பாதை, பார்க்கவே பயமாக தான் இருக்கும். அப்போ எப்படி செல்வது.
இந்த பாதையில் சில வீடுகள் உள்ளன. அவர்கள் கூட அந்த பாதiயில் இரவு வேளையில் அதிகளவில் நடமாடமாட்டார்கள்.
இந்த பாதை முடிவடையும் இடம் தான் யாரும் இரவில் செல்லாததற்கான காரணம். பாதை முடியும் இடத்தில் அப்படி என்ன?
புதைக்குழி.
இரவு வேளைகளில் இந்த பகுதியிலிருந்த சத்தங்கள் கேட்பதாக அந்த பகுதியிலுள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி ஒரு நாள் அங்குள்ள ஒரு வீட்டில் திருமணம். இதற்காக முதல் நாள் இரவு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அந்த வீட்டில் பலர் இரவு நேர வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் சிலர் அந்த பகுதிக்கு புதிது. அவர்களுக்கு தெரியாது அங்கு நடக்கும் செயற்பாடுகள். இவர்களில் சிலர் இரவு 9 மணியளவில் அந்த பாதையினூடாக சென்று மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சிறிய சத்தம். யாரோ இருவர் கதைத்துக் கொண்டிருப்பது போல. ஆனால் அவர்கள் அதை கணக்கெடுக்கவில்லை.
தொடர்ந்தும் நண்பர்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
தீடீரென ஒரு உருவம். அவர்களை நோக்கி வருவது போல. ஆனால் அதையும் அவர்களை யாரும் கணக்கெடுக்கவில்லை. யாரோ திருமண வீட்டிற்கு வருகின்றார்கள் என நினைத்து தொடர்ந்தும் அவர்களுடைய வேலைகளை ஆரம்பித்தனர்.
அவ்வாறு அவர்களை நோக்கி வந்த உருவம். சிறிது நேரத்தின் பின்னர் சற்று பெரியதாகி வந்தது. அதை கண்ட அவர்களுக்கு சிறிய சந்தேகம் தோன்றியப்போதிலும், அதையும் கணக்கெடுக்கவில்லை.
மீண்டும் அந்த உருவம் பாரியளவில் பெரிதாகி அவர்களை நோக்கி வந்ததை கண்ட அந்த குழுவினர் அங்கிருந்து எழுந்தனர்.
எழுந்த நிலையில் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, உருவம் அவர்களை நெருங்கியது. அப்போது தான் அவர்கள் அந்த உருவத்தின் முகத்தை பார்த்தனர்.
அந்த உருவத்தின் முகம் பார்க்கவே பயங்கரமாக இருந்ததுடன், எரிந்த நிலையில் காணப்பட்டது.
இதைகண்ட அவர்கள் அந்த பகுதியை விட்டு ஓட ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் திருமணம்.
முன்தினம் இரவு மது அருந்த சென்ற அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அனைவருக்கும் காய்ச்சல்.
இவர்களுக்கு ஏற்பட்ட இந்த காய்ச்சல் சுமார் 2 கிழமைகளுக்கு மேல் நீடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றும் அந்த பாதை அப்படியே தான் இருக்கிறது. தயவு செய்து அப்படியான பாதைகளில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)