skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

இப்படியும் ஆவி உண்டு!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 11:01 PM

பேய்களின் ஆட்சிகள் என்றே இந்த காலத்தை சொல்ல முடியும். காரணம் பேய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரினால் கேட்கக் கூடியதாய் உள்ளது.

பேய்களின் நடமாட்டம் அதிகமான இரவு வேளைகளில் தான் உள்ளது என பலர் கூறி கண்டுள்ளேன். ஏன் எனது அனுபவங்களும் கூடுதலாக இரவு நேரங்களில் தான்.

இன்றும் நானும் எழுதப்போவது இரவு நேரத்தில் இடம்பெற்ற உண்மை பேய் கதை தான்!

இலங்கை பிரசித்த பெற்ற ஓர் இடம். அங்கு பேய்களின் நடமாட்டம் இன்று உள்ளது என கூறுவதினால் ஊரின் பெயரை கூற விரும்பவில்லை.

அங்கு ரயிலில் இடம்பெற்ற ஓர் உண்மை சம்பவம் தான் இது.

அந்த பிரதேசத்தில் அதிகமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வார்களாம். அதனால் அந்த பிரதேசத்தில் ரயில் செல்லும் போது ஓட்டுனர் பயந்து தான் ரயிலை செலுத்துவார் என கூறுகின்றனர்.

இது இப்படி இருக்க தண்டவாளத்தை பார்த்துக் கொள்ள ஓருவரை கடமையில் அமர்த்தியிருப்பார்கள் அல்லவா. அவருக்கு தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு நாள் இரவு தனது கடமைகளுக்காக தண்டவாளத்தை பார்த்துக் கொண்டு அந்த வழியாக நடந்துச் சென்றுள்ளார்.

அவர் ரயில் செல்லும் பாலத்தை அண்மித்தார். அப்போது அந்த பாலத்தில் ஒருவர் தண்டவாளத்தை உடைத்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளார்.

யார் அது என கேள்வி எழுப்பிக் கொண்டே அருகில் சென்றுள்ளார். இவர் அருகில் செல்ல செல்ல அவர் இவரை பார்க்காது தமது வேளையை செய்துக் கொண்டுள்ளார்.

இவருக்கு கோபம் தான் சொல்வதை கேட்கவில்லை என. அருகில் சென்று தமது பலத்தை முழுமையாக உபயோகித்து அவனை தாக்கியுள்ளார்.

ஆனால் அவர் தாக்கியது திருடனை அல்ல. இரும்பு பாலத்தை தான். அவ்விடத்தி;ல் இருந்தவனை காணவில்லையாம். அவரது கை அன்றுடன் சரி!

இன்று அவர் தமது வலது கையை இழந்து தான் வாழ்ந்துக் கொண்டுள்ளார்…….
3 கருத்துகள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

பெண்ணின் நடமாட்டம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:03 PM

பேய்கள் என்றாலே கூடுதலாக தனிமையான, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலேயே இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர்.

அப்படி தனிமையான இடங்களில் பேய்களை கண்டவர்கள் அதிகம் இருக்கின்றனர். அப்படி தான் எனக்கு தெரிந்த, இலங்கையில் மிக பிரசித்தி பெற்ற ஓர் இடம்! அந்த ஊரில் பேய்களின் நடமாட்டம் சற்று அதிகமாக தான் இருக்கும்.

அந்த ஊரில் இடம்பெற்ற ஓர் சம்பவத்தை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.
குறித்த ஊரிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் ஒரு சிறிய கிராமம்.

அந்த கிராமத்தில் தேயிலை செறிந்த காணப்படுவதுடன், வாழைத் தோப்புக்களும் காணப்படுகின்றன.

அத்துடன், அந்த ஊரில் சிறிய நீர் வீழ்ச்சியொன்றும் உள்ளதுடன், அதனை சூழ மூங்கில்கள் கூட்ட கூட்டமாக காணப்படுகின்றமை அனைவரது உள்ளங்களையும் கவரும் ஒரு இயற்கை காட்சி.

ஆனால், அந்த இயற்கையில் தான் மறைந்திருக்கும் ஓர் உண்மை சம்பவம்.
அந்த மூங்கில்கள் காணப்படும் இடத்தில் ஒரு தனி வீடு! அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை.

மனிதர்கள் வாழ வேண்டிய வீட்டில் பிராணிகள் தான் வாழ்ந்து வருகின்றன.
இதற்கான காரணம் தான் அந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், அந்த வீட்டில் ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அழகான அம்சமான குடும்பம்.

இவர்களில் அந்த வீட்டில் சிறிது காலமே வாழ்ந்தனர். அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இப்படி பல பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அந்த குடும்பத்தில் தலைவியை தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அந்த வீட்டில் இன்றும் அந்த பெண்ணின் நடமாட்டம் இருக்கின்றதாக தெரிவிக்கின்றனர் அப்பிரதேச மக்கள்.

இந்த பெண்ணின் கொலையை அடுத்து வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர் அந்த வீட்டின் உரிமையாளர்கள்.

இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்காக ஒருவர் மாத்திரமே வந்து தங்கியுள்ளார். முதலாம் நாள் இரவு. இந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறமை அவருக்கு தெரியாது. (யாருக்கும் தெரியாது)

நேரம் சுமார் 10 மணி இருக்கும். கடையில் வாங்கி வந்த இறைச்சியுடன் கூடிய உணவை உண்டு விட்டு நித்திரைக்கு சென்றுள்ளார் குறித்த நபர்.

11 மணியளவில் ஒரு சிறிய சத்தம் கேட்டுள்ளது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. மீண்டும் பெண்ணொருவர் அழுவது போல சத்தம் கேட்டுள்ளது. யார் இந்த இடத்தில் இந்த நேரத்தில் அழுவது என மனதில் நினைத்து படுக்கையிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.

பார்த்தால் யார் இல்லை. பின்னர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.

சரியாக நள்ளிரவு 12 மணி.

அய்யோ என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண்ணின் குரல். இவர் எழுந்து கையில் கிடைத்த இரும்பொன்றை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

மீண்டும் அதே குரல் வீட்டிற்குள் கேட்டுள்ளது. வீட்டிற்குள் வந்து பார்த்தால், வெளியில் அந்த பெண்ணின் சத்தம். இப்படி மாற்றி மாற்றி சத்தம் கேட்டுள்ளது.

அப்போது தான் இவருக்கு ஓர் சந்தேகம்! இது நிச்சயம் பெண்ணின் குரல் இல்லை. இது ஆவிகளின் நடமாட்டமாக தான் இருக்கும் என மனதில் நினைவு.

அப்படியே வீட்டிற்குள் சென்று விட்டார். பின்னர் அன்று முழுநாளும் அவர் தூங்கவில்லையாம். அன்றிரவே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த நாள் வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவர் சென்று விட்டாராம்.
அன்றிலிருந்து இன்று வரை அந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை.

இன்றும் அந்த வீட்டில் சத்தங்கள் கேட்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்

சனி, 15 ஆகஸ்ட், 2009

ஆவி தள்ளிய வேன்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 12:44 PM

நமது வெற்றியின் செய்தி பிரிவில் கடமையாற்றும் லெனினின் உண்மை கதை!

இவரும் இவருடைய நண்பர்களும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் புஸ்ஸல்லா பகுதியிலுள்ள போபிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்கள் அந்த மரண சடங்கு வீட்டிற்கு வேன் ஒன்றிலேயே சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் வேனில் ஹட்டனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போது, வேனில் ஒரே பேய் கதைகளை கதைக் கொண்டே சென்றுள்ளனர்.

அப்போது அவருடைய நண்பனொருவன் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த இடத்தில் இரவு வேளையில் செல்லும் வாகனங்கள் தீடீரென நின்று விடுவதாக கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு, பார்ப்போம் இன்று நாங்கள் அதே பாதையின் ஊடாக தானே செல்ல போறோம். என்ன நடக்குதுனு பார்ப்போம் என தெரிவித்துள்ளனர்.

சரியான அதிகாலை 2 மணி, குறித்த இடத்தை வேன் நெருங்கியுள்ளது.

யாரும் பாதையில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில். பாதை அமைதியாக பேய்களை வரவேற்பது போல் காட்சியளித்தது.

குறித்த இடம். அவன் கூறியது போலவே எஞ்சின் தீடீரென செயலிழந்து வேன் வீசுப்பட்டு, உரு சுவரில் மோதி நின்றதாம்!

வேனில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின்விளக்குகளும் அனைந்து, குறித்த இடமே இருளாயிற்றாம்.

சாரதி வேனை மீண்டும் ஸ்டாட் செய்ய முயற்சித்தும், வேன் ஸ்டாட் ஆகவில்லையாம்.

சுமார் அதே இடத்தில் சூரியன் உதிக்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்;துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த வேனில் இருந்த வேளையில் யாரோ வேனை தட்டுவது போலவும், வேனை தள்ளுவது போலவும் உணர்வுகள் தென்பட்டதாம்!

அன்று விடிந்தது. ஆள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. அப்போது அந்த பிரதேசத்தில் சென்றவர்களிடம் இவர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது பிரதேச மக்கள் தெரிவித்ததாகவது:- இது அந்த பிரதேசத்தில் இடம்பெற்ற 5ஆவது சம்பவம் எனவும், இந்த பிரதேசத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் காலை வேளையில் வேன் ஸ்டாட் செய்தவுடன் ஸ்டாட் ஆகிவிட்டதாம்!
3 கருத்துகள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பாதையின் முடிவில் புதைக்குழி!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:18 PM

ஒரு தனியான பாதை, யாரும் அந்த பாதையில் மாலை 6 மணிக்கு பின்னர் செல்ல மாட்டார்கள். (இன்றும்)

மின்விளக்குகள் கூட அந்த பாதையில் இல்லை. மாலை 6 மணிக்கு பின்னர் இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்படும் அந்த பாதை, பார்க்கவே பயமாக தான் இருக்கும். அப்போ எப்படி செல்வது.

இந்த பாதையில் சில வீடுகள் உள்ளன. அவர்கள் கூட அந்த பாதiயில் இரவு வேளையில் அதிகளவில் நடமாடமாட்டார்கள்.

இந்த பாதை முடிவடையும் இடம் தான் யாரும் இரவில் செல்லாததற்கான காரணம். பாதை முடியும் இடத்தில் அப்படி என்ன?

புதைக்குழி.

இரவு வேளைகளில் இந்த பகுதியிலிருந்த சத்தங்கள் கேட்பதாக அந்த பகுதியிலுள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ஒரு நாள் அங்குள்ள ஒரு வீட்டில் திருமணம். இதற்காக முதல் நாள் இரவு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அந்த வீட்டில் பலர் இரவு நேர வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலர் அந்த பகுதிக்கு புதிது. அவர்களுக்கு தெரியாது அங்கு நடக்கும் செயற்பாடுகள். இவர்களில் சிலர் இரவு 9 மணியளவில் அந்த பாதையினூடாக சென்று மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறிய சத்தம். யாரோ இருவர் கதைத்துக் கொண்டிருப்பது போல. ஆனால் அவர்கள் அதை கணக்கெடுக்கவில்லை.

தொடர்ந்தும் நண்பர்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

தீடீரென ஒரு உருவம். அவர்களை நோக்கி வருவது போல. ஆனால் அதையும் அவர்களை யாரும் கணக்கெடுக்கவில்லை. யாரோ திருமண வீட்டிற்கு வருகின்றார்கள் என நினைத்து தொடர்ந்தும் அவர்களுடைய வேலைகளை ஆரம்பித்தனர்.

அவ்வாறு அவர்களை நோக்கி வந்த உருவம். சிறிது நேரத்தின் பின்னர் சற்று பெரியதாகி வந்தது. அதை கண்ட அவர்களுக்கு சிறிய சந்தேகம் தோன்றியப்போதிலும், அதையும் கணக்கெடுக்கவில்லை.

மீண்டும் அந்த உருவம் பாரியளவில் பெரிதாகி அவர்களை நோக்கி வந்ததை கண்ட அந்த குழுவினர் அங்கிருந்து எழுந்தனர்.

எழுந்த நிலையில் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, உருவம் அவர்களை நெருங்கியது. அப்போது தான் அவர்கள் அந்த உருவத்தின் முகத்தை பார்த்தனர்.

அந்த உருவத்தின் முகம் பார்க்கவே பயங்கரமாக இருந்ததுடன், எரிந்த நிலையில் காணப்பட்டது.

இதைகண்ட அவர்கள் அந்த பகுதியை விட்டு ஓட ஆரம்பித்தனர்.

அடுத்த நாள் திருமணம்.

முன்தினம் இரவு மது அருந்த சென்ற அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அனைவருக்கும் காய்ச்சல்.

இவர்களுக்கு ஏற்பட்ட இந்த காய்ச்சல் சுமார் 2 கிழமைகளுக்கு மேல் நீடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றும் அந்த பாதை அப்படியே தான் இருக்கிறது. தயவு செய்து அப்படியான பாதைகளில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
1 கருத்துகள்

வியாழன், 9 ஜூலை, 2009

மைக்கல் ஜெக்சனின் ஆவி!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:54 AM
0 கருத்துகள்

வியாழன், 9 ஏப்ரல், 2009

தனியே யாரும் செல்லாத பாதை!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:27 AM

வித்தியாசமான பாதைகள் பலவற்றை நாம் கண்டுள்ளோம், ஆனால் இலங்கையிலுள்ள மிக பிரசித்தி பெற்ற பாதையொன்று உள்ளது.

அந்த பாதையானது ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ஒவ்வொரு பெரிய வளைவுகளுடன் அமைந்துள்ளது. சுமார் 10 கிலோமீற்றர்களை கொண்ட இந்த பாதையில் பைனஸ் மரங்கள் சூழவுள்ளன. இந்த பாதையில் சிறிய நீர்வீழ்ச்சிகளும் எமக்கு பார்க்க கூடியதாய் இருக்கும். இருப்பினும் இந்த பாதை ஆள்நடமாட்டமில்லாமலேயே இருக்கும்.

எனினும், இந்த பாதையில் காலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும். அதன் பிறகு பயணிப்பவர்களின் உயிரிற்கு உத்தரவாதமில்லை என தான் கூறவேண்டும்.

எனெனில், குறித்த பாதையில் கொலை மற்றும் கொள்ளை ஆகியன இடம்பெறும் ஒரு பகுதி! அதை தவிர மிருகங்களில் இராஜ்ஜியம் அந்த பாதை.

இந்த பாதையை கடந்த சென்றால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறு குறித்த பிரதேசத்தில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் யாரும் அந்த பாதையில் இரவு வேளையில் செல்ல சற்று தயங்குவார்கள். ஏன் பகலிலும் கூட.

இப்படி, இருக்கும் போது ஒரு நாள் இரவு 10 மணி. ஒருவர் அந்த பாதையில் வேன்னொன்றில் இருவர் மாத்திரம் வந்துள்ளனர்.

எனினும், வாகன சாரதிக்கு இந்த பாதையில் நடக்கும் சம்பவங்கள் பற்றி ஒன்றும் தெரியாது, இருப்பினும், மற்றையவர் அதைபற்றி அறிந்திருந்தார்.

சரியாக 7 கிலோமீற்றர் கடந்த வந்துவிட்டனர். தீடீரென அவர்கள் பயணித்த வேன் யாராவது தள்ளுவது போல் தள்ளுப்பட்டு இயந்திரம் நின்றுவிட்டது.

சாரதிக்கு ஒரே தடுமாற்றம். என்ன இப்படி என. மீண்டும் வாகனத்தை ஸ்டாட் செய்ய வாகனம் ஸ்டாட் ஆகவில்லை.

சரி இறங்கி பார்ப்போம் என அந்த சாரதி கூற, பக்கத்தில் இருந்தவருக்கு இந்த பாதையை பற்றிய அனுபவமுண்டு அல்லவா. வேண்டாம் சற்று இருப்போம் என கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து இருவரும் அந்த வேனிலேயே சுமார் 10 நிமிடங்கள் இருந்து பின்னர் வேனை ஸ்டாட் செய்துள்ளனர்.

அப்போது உடனடியாக ஸ்டாட் ஆகியுள்ளதாம். இவர்கள் வந்து விட்டார்கள்.

சற்று தொலைவில் வந்த சாரதி அருகில் அமர்ந்திருந்தவரிடம் ஏன் அந்த இடத்தில் வேன் நின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர், நேற்றைய தினம் அந்த இடத்தில் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு அந்த இடத்தில் தான் போட்டு விட்டுச் சென்றிருந்தனர்.
அதுதான் அந்த இடத்தில் வேன் நின்றது என அவர் கூறியுள்ளார்.

இனிமேல் தனியாக இந்த பாதையில் பயணிக்க வேண்டாம் எனவும் சாரதியிடம் அருகிலுள்ளவர் கூறியுள்ளார்.

இந்த பாதை தொடர்பாக மேலும் சில கதைகளை நான் தொடர்ந்து தருகிறேன்.
0 கருத்துகள்

திங்கள், 16 மார்ச், 2009

பெண் அல்ல அது!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:20 PM

பாடசாலையின் காவலாளி தினமும், 8 மணிக்கு தனது கடமையை பொறுப்பெடுத்து, காலை 6 மணிக்கு தமது கடமையிலிருந்து சென்று விடுவார்.

காவலுக்குவரும் அவர் பாடசாலையை சுற்றி வந்துக் கொண்டே இருப்பது அவர் செய்யும் வேளை.

வழமைப்போல ஒரு நாள் இரவு. கடமைக்கு வந்த காவலாளி தனது இரவு உணவை சாப்பிட்டு விட்டு, தனது வேலையை ஆரம்பித்தார்.

சரியாக நேரம் 12 மணி பாடசாலையிலுள்ள படிகளுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருப்பதை கண்ட காவலாளி. மனதில் யார் அந்த பெண் என்ற யோசனை.

சரி அருகில் சென்று பார்ப்போம் என நினைத்து சற்று அருகே சென்று பார்க்கும் போது. பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதியிலுள்ள ஆசிரியரின் மனைவி தான் அது.

கண்டதும் காவலாளிக்கு சற்று கோபம் வந்தது. காரணம் இந்த 12 மணிக்கு தனியாக ஒரு பெண்ணை வெளியில் அனுப்பியுள்ளார் ஆசிரியர் என தான்.

ஏதாவது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என நினைத்து அந்த பெண்ணிடம் எதையும் கேட்கவில்லை காவலாளி.

உடனடியாக காவலாளி சென்றார் ஆசிரியரின் விடுதிக்கு,
விடுதியிலுள்ள ஆசிரியரை எழுப்பிய காவலாளி, சற்று கோபத்துடன்,

உங்களுக்குள் என்ன பிரச்சினை வந்தாலும், தனியாக மனைவியை இந்த 12 மணிக்கு வெளியில் அனுப்புவதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆசிரியர், உனக்கென பைத்தியமா? உள்ளே வந்து பார் அவள் தூங்குகிறாள் என கூற.

காவலாளிக்கு சந்தேகம் இப்போது தானே பார்த்தது விட்டு வந்தேன் என நினைத்து,

அங்கிருந்தே படியை பாரத்த காவலாளி படியில் யாரும் இல்லை. அப்போது தான் தெரியும். கண்டது பெண் அல்ல அது! பேய்

அன்று முழு நாளும் ஆசிரியரின் விடுதியிலுள்ள அறையொன்றில் தங்கிக் கொண்டுள்ளார் குறித்த காவலாளி.
1 கருத்துகள்

புதன், 11 மார்ச், 2009

புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:48 PM

தாயும் மகளும் மாத்திரமே அந்த குடும்பத்தில் உள்ளனர். மகளுடைய வயது 10! இவர்களுக்கு சொந்த வீடொன்று இருக்கவில்லை.

அதனால் அவர்கள் வாடகைக்கு அமர்த்தப்படும் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.

இப்படி ஒரு சந்திர்ப்பத்தில் ஒரு சிறிய வீடொன்றிற்கு வாடகைக்கு சென்றனர்.

வீட்டை கண்ட மகளுக்கு மிகுந்த சந்தோஷம், காரணம் அவளுடைய அறை மாத்திரம் வீட்டிலேயே மிக பெரிய அறை என்பதினால்!

இப்படி காலங்கள் சென்று வருடங்களும் சென்றது.

இந்த வீட்டில் ஒருவர் இறந்துள்ளதாகவும், அவரின் ஆவி இன்னமும் இந்த வீட்டில் உள்ளதாகவும் வீட்டிற்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ள குறித்த சிறுமியின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

எனினும், இந்த சிறுமி கூறியதாவது, நாங்கள் இத்தனை வருடங்களாக இருக்கின்றோம், எனினும் இதுவரை யாரும் அப்படி வீட்டிற்குள் வரவில்லை என.

தற்போது, இந்த சிறுமியின் வயது 14 ஆகும். இதுவரை வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.

குறித்த சிறுமியின் தாய், நித்திரைக்கு செல்லும் முன்னர் வீட்டிலுள்ள அனைத்து மின்குழிழிகளை அனைப்பது வழக்கம்!

இப்படி ஒரு நாள்! சிறுமி நித்திரைக்கு சென்று நித்திரை கொண்டுள்ளாள்.

காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டிலுள்ள தாயின் அறையில் மின்குழிழ் எரிகின்றமையை கண்டதும் சிறுமிக்கு ஆச்சரியம்!

ஒருபோதும் இவ்வாறு அம்மா மின்குழிழை எரியவிடமாட்டரே! அனைத்து விடுவாரே! என நினைத்து கொண்டு தாயிடம் கேட்டபோது!

தான் நித்திரைக்கு சென்று, மின்குழிழை அனைத்து விட்டு கட்டலில் படுத்து, சிறிது நேரத்தின் பின்னர், எழுந்து பார்க்கும் போது யாரோ ஒருவர் தன்னை நோக்கி பார்ப்பதை போலவும், அவர் மீசை வைத்த உயர்ந்த மனிதன் எனவும் கூறியுள்ளார்.

அதனாலேயே தான் மின்குழிழை அனைக்காது இருந்ததாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இதைகேட்ட சிறுமிக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை, காரணம் 14 வயது சிறுமி தானே!

இப்படி நாட்கள் சென்றன. ஒரு நாள் சிறுமி நித்திரைக்குச் செல்லும் போது, கண்ணாடியை பார்ப்பது வழக்கம்! அன்றும் தன்னிடமுள்ள கண்ணாடியில் முகத்தை பார்த்து விட்டு, அந்த கண்ணாடியை தமது மேசை லாச்சியினுள் வைத்து விட்டு, நித்திரை கொண்டுள்ளாள், காலையில் எழுந்து பார்த்ததும் அந்த கண்ணாடி கீழே வீழ்ந்துள்ளது.

அதனை அந்த சிறுமி பெரிதாக நினைக்கவில்லை. தான் தான் கண்ணாடியை மறந்து விட்டு கீழே வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளாள் அந்த சிறுமி.

இன்னுமொரு நாள்! நித்திரையை விட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது, சிறுமியின் நகை பெட்டியை யாரோ எடுத்து பார்த்துள்ளது போல் இருந்துள்ளது.

இப்படி சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை இந்த சிறுமி தனது நண்பர்களிடமும் தாயிடமும் கூறியுள்ளார்

எனினும், நண்பர்கள் இதனை நம்பவில்லை. இவள் இரவில் தனியாக நடக்கின்றாள் போல என கூறி கேலி செய்துள்ளனர்..

ஆனால் இதனை அந்த சிறுமியின் தாய் நம்பியுள்ளார். காரணம் கண்ட அனுபவம் உண்டல்லவா!

இப்படி சில நாட்களாக நடந்த சம்பவங்களை கண்ட அந்த சிறுமியின் தாய், வீட்டை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளார்.

வேறு வீடொன்றை பார்த்து விட்டு, அடுத்த நாள் புதிய வீட்டிற்கு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் தயாராக்கப்பட்டது. ஆகவே இன்று கடைசி இரவு!

ஆபத்தான இரவு! காரணம் கடைசி இரவல்லா! எது வேண்டுமானாலும் நடக்கலாம்!

சிறுமி நித்திரைக்குச் சென்று விட்டாள், தாயும் சென்று விட்டாள் நித்திரைக்கு!

நேரம் சென்று விட்டது, சிறுமிக்கு நித்திரை சென்று நீண்ட நேரம்!

தீடீரென சிறுமியின் கண்கள் திறந்தன. திறந்து பார்க்கும் போது வீடு முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.

தமது கட்டிலுக்கு அருகில் ஒருவர் நின்று கொண்டிருக்கின்றது போல் அந்த சிறுமிக்கு உணர்வு. பார்த்தாள், ஒருவர் தன் எதிரில் நின்று கொண்டு, தன்னை பார்ப்பது போல. தீடீரென கதவுகள் திறப்பது போல் சத்தம்!

நிலத்துடன் கதவு உராய்வது போல!

சிறுமி தனது கண்களை நன்றாக திறந்து பார்த்த போது, யாரோ ஒருவர் தனது அறை கதவை இழுத்து பிடித்திருப்பது போல்.

அவ்வாறு பிடித்திருப்பவரின் கை மாத்திரமே சிறுமிக்கு தெரிகின்றது.
அந்த கை, புகை படர்ந்திருப்பது போல், முழுமையான கை இருக்கவில்லை. எப்படி இருக்கும் அந்த சிறுமிக்கு. எவ்வித அசைவும் இன்றி அப்படியே கட்டிலில் இருந்திருக்கிறாள் அந்த சிறுமி!

சிறித நேரத்தில் தன்னை அறியாமலே நித்திரை சென்று விட்டது. அதிகாலை வேளையில் மீண்டும் சிறுமி எழுந்துள்ளார், அப்போது வீட்டின் மின்குமிழ்கள் எரிக்கின்றதாம்.

மீண்டும் நித்திரைக்கு சென்றுவிட்டாள் அந்த சிறுமி!

காலையில் எழுந்து தனது தாயிடம் இந்த சம்பவம் தொடர்பான கலந்துரையாடிய குறித்த சிறுமி! அனைத்தையும் கூறியுள்ளார். அப்போதே தனக்கும் அவ்வாறான சத்தங்கள் கேட்டதாகவும், அதனாலேயே தான் மின்குமிழ்களை எரிய செய்ததாகவும் தெரிவித்துள்ளார் தாய்.

அன்றே அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டனர் தாயும் மகளும்!
0 கருத்துகள்

செவ்வாய், 10 மார்ச், 2009

உயிருடன் வந்த நாய்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:52 AM

ஒரு பெண்! அவள் வீட்டில் தனது செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளாள்!

இப்படி சில காலங்கள் சென்றன. ஒரு நாள் அந்த நாய் தீடீரென இறந்துள்ளது.அதற்கான காரணம் கூட தெரியவில்லை.

அந்த நாயை வளர்த்த அந்த பெண்ணுக்கு கவலை தான்!

இந்த கவலையிலேயே சில நாட்கள் சென்றன....

ஒரு நாள் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளாள்.

வீடு திரும்பிய பெண் வீட்டிலுள்ள பூனையுடன் கட்டிலில் நித்திரையில் இருக்கின்றபோது.

அருகில் உயிரிழந்த அவளுடைய செல்லப்பிராணியான நாய்!

என்ன ஆச்சிரியம்! அந்த நாய் அவளுடைய அருகில் வந்து, அவளுடைய கழுத்திலுள்ள காயத்தை நாக்கால் தடவியுள்ளது.

சிறிது நேரம் அந்த பெண்ணின் அருகேயே நின்ற அந்த நாய், அப்படியே மறைந்து விட்டதாம்!

பெண்ணின் அருகிலிருந்த பூனையும் ஆச்சிரயமாய் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றது.

அவளுக்கோ ஆச்சரியம்! இன்னமும் அந்த நாயின் ஞாபகத்திலேயே இருக்கின்றாளாம் அந்த பெண்!
1 கருத்துகள்

திங்கள், 9 மார்ச், 2009

தலையில்லா நண்பன்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:39 PM

காலை 4.30 நிறுவனத்தில் யாரும் இல்லை! தனது காலை நேர வேலைக்காக சதுரங்க என்றவர் மாத்திரம் நிறுவனத்திற்கு வர!

அனைத்து மின்குமிழ்களும் அனைத்து, வெளிச்சமே இல்லை!

ஆனால் நிறுவனத்திலுள்ள தொலைகாட்சி மாத்திரம் வேலை செய்து கொண்டிருக்கின்றதாம்!

அவர் தொலைக்காட்சியின் அருகில் வந்து பார்த்த போது! தொலைக்காட்சிக்கு முன்னாள் உள்ள கணனியில் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார் சதுரங்க!

தன்னுடன் காலையில் வேலைக்கு வரும் நண்பன் என்று நினைத்து கொண்டு, அருகில் சென்றபோது!

என்ன ஆச்சரியம்!

அமர்ந்திருப்பவரின் தலையை காணவில்லையாம்! ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம் அவர்..

பின்னர் அருகில் சென்று கதிரையை திருப்பி பார்த்திருக்கிறார்! அப்போது கதிரையில் யாரும் இருந்திருக்கவில்லை!

பின்னர் சில நிமிடங்கள் கழித்தே உரிய நபர் வேலைக்கு வந்ததாக சதுரங்க எனக்கு கூறினார்.

தான் கண்டது நினைவாக இருக்கலாமென நினைத்துக் கொண்டிருந்து அவர், தற்போதே அது நினைவல்ல நிஜம் என்று உணர்ந்திருக்கிறார்.
1 கருத்துகள்

ஞாயிறு, 8 மார்ச், 2009

ஒரு விதமான மனம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:29 AM

ஒரு அழகான சிறிய குடும்பம்! தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகியோரை கொண்ட சிறிய இந்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

இவர்களின் வீட்டிற்கு அருகில் ஒரு தனி வீடு, அங்கு வயோதிபர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்!

அவர் கூடுதலான நேரம், இந்த குடும்பத்தினருடன் தான் இருப்பார்!

வீட்டு தலைவர் வேலைக்குச் சென்று விடுவார், பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விட்டால் வீட்டில் தலைவி மாத்திரமே!

அப்போது தனிமைக்கு அந்த வயோதிபர் அந்த வீட்டில் வந்து பேசிக் கொண்டிருப்பது வழமை!

இப்படியே காலங்கள் சென்றன!

ஒரு நாள் இந்த வீட்டிலுள்ளவர்கள் தமது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

சென்று சிறிது காலம் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்போது, அந்த வயோதிபர் உயிரிழந்து விட்டதாக கேள்வியுள்ளனர்.

மிகுந்த கவலைப்பட் அவர்களின் வாழ்க்கையில் நாட்கள் கழிந்தன.

சிறிது நாட்களின் பின்னர், வீட்டில் குறித்த சில அறைகளில் மாத்திரம் ஒரு விதமான மனம் வந்து கொண்டே இருந்திருக்கிறது.

இவர்கள் இதை பொருட்படுத்த வில்லை. எதாவது பழுதடைந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர்.

இந்த மனம் காலங்கள் சென்றும் ஒரே இடத்தில் மாத்திரம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

என்னவாக இருக்கும் என நினைத்த போதே அவர்களுக்கு மனதில் தோன்றியது உயிரிழந்த வயோதிபரை!

அவர் தமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவ்வாறு மனம் வீசும் இடத்தில் மாத்திரமே நின்று பேசுவார் என மனதில் தோன்றியது!

ஆனால், அந்த வீட்டில் பல அறைகளுக்கு அவர் சென்றதில்லை! அவ்வாறு செல்லாத அறைகளில் எந்த வித மனமும் இல்லை என வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போதே புரிந்து கொண்டனர் அந்த வயோதிபர் இன்னும் தம்முடன் இருக்கின்றார் என்று!

இந்த மனம் இன்றும் அந்த வீட்டில் இருக்கின்றதாம்!

தற்போது அந்த வயோதிபருடன் அவர்களின் காலம் செல்கிறது!
1 கருத்துகள்

வெள்ளி, 6 மார்ச், 2009

அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 1:48 PM

ஒரு அழகிய பழைமை வாய்ந்த மிக பெரிய வீடு! அதில் பல வருடங்களாக யாரும் வசிக்கவில்லை! அதற்கான காரணமும் தெரியவில்லை!

எனினும், ஒரு சிறிய குடும்பம் அந்த வீட்டை விலைக்கு வாங்கி அதில் குடியேறியது!

அந்த வீட்டின் வெளி தோற்றத்தை கண்டே, இவர்கள் இந்த வீட்டை விலைக்கு வாங்கி அங்கு குடியேறினர்.

எனினும், சிறிது காலம் எந்த விதமான பிரச்சினையுமின்றி மிக அழகாக அந்த குடும்பம் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தது.

இப்படி நாட்கள் சென்றன!

ஒரு நாள் குடும்பத்தில் இருக்கும் அங்கத்தவர்கள் தமது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

ஆனால், பாடசாலை செல்வதற்காகவும், தனது கல்விக்காகவும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியாக அந்த வீட்டில் தங்கிவிட்டாள்!

உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை!

இரவு நேரம் வந்துவிட்டது! யாரும் இல்லை என்ற கவலையோ! பயமோ! இல்லாமல். தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்!


சிறிது நேரத்தில் கழிவறைக்குச் சென்று வர அவள் கழிவறை செல்லும் போது, அவளுக்கு ஒரு பழக்கம்! கழிவறை செல்லும் முன் கைகளை கழுவுவது!

அன்றும் அதேபோன்று தனது கைகளை கழுவும் போது முன்னாள் உள்ள கண்ணாடியில், ஒரு உருவம் அவளுக்கு தென்பட்டது. தான் நிற்கும் இடத்திலுள்ள கதவிற்கு அருகேயே அந்த உருவம்!

அவள் பின்னாள் திரும்பி பார்த்து விட்டு அருகே சென்ற போது! என்ன ஆச்சிரியம்! அது ஒரு சிறுமி.

அந்த சிறுமி அரச பரம்பறையைச் சேர்ந்த சிறுமி போல!

அரச கால ஆடைகளை அணிந்துள்ளதுடன், அவளுடைய கூந்தல் சிவப்பு நிறமாகவும் இருந்துள்ளது.

அதை கண்ட வீட்டு சிறுமி அருகில் சென்றுள்ளாள்!

எனினும், அவள் அருகில் செல்ல செல்ல அந்த உருவமும் அப்படியே சென்று விட்டதாம்!

அப்போது தான் தெரிய வந்துள்ளது, அந்த வீட்டில் முன்னைய காலத்தில் வாழ்ந்தது. அரச குடும்பத்தினரென!

இந்த சிறுமி இன்றும் அந்த வீட்டில் வாழ்ந்து வருவதாக அந்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்

வியாழன், 5 மார்ச், 2009

வாழ்க்கையில் தான் காணாத பெண்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 8:38 AM

இரவு 11 மணி, யாரும் இல்லை! தனியாக நிறுனவத்தில் ஒருவர் மாத்திரம்!

சரி தேனீர் அருந்தி விட்டு வர நிறுவத்தின் உணவறைக்கு செல்ல தனது அறையை விட்டு வெளியே வந்தார் அவர்!

தான் வெளியேறும் கதவின் அருகில் ஒரு பெண் நிற்பதை கண்டார்!

அதுவும், தான் நிற்கும் இடத்திலிருந்து சாதாரணமாக 5 அடி தூரத்திலேயே அவள் நின்று கொண்டிருந்தாள்!

அந்த 11 மணிக்கு யார் நிறுவனத்தில்! அதுவும் கண்டு பலக்கப்படாத ஒரு பெண்! என மனதில் நினைப்பு!

அவளுடைய கண்கள் கூரிய கண்கள்! அப்படிப்பட்ட ஒரு கண்ணை அவன் வாழ்க்கையில் கண்டதில்லை!

சரி யார் என்று பார்ப்போம்! என நினைத்து கதவின் அருகில் வர முற்பட்ட போது அங்கிருந்து அந்த பெண் வெளியேறுவதை கண்ட அவர் விரைந்து அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது! ஒரு அதிர்ச்சி!

அதற்குள் அவளை காணவில்லை! தேடி பார்த்தும் யாரும் இல்லை!

அங்கிருந்தவர்களிடம் கேட்ட போது! அப்படி யாரையும் நாங்கள் காணவில்லை என்று கூறியுள்ளனர்.

அன்று கண்ட பெண்! வாழ்க்கையில் தான் காணாத பெண்!
0 கருத்துகள்

செவ்வாய், 3 மார்ச், 2009

ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:57 AM

பல வருடங்களுக்கு முன்னர், ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தை பார்வையிடும் பணியில் ஈடுபட்டுள்ள உத்தியோகஸ்தர் தண்டவாளம் வழியாக நடந்து வண்ணம் தனது கடமையில் ஈடுபட்டிருந்தார்.

இப்படி சிறிது தூரம் நடந்து வந்து கொண்டிருந்த அவர், தண்டவாள பாலத்தை அண்மித்தார்.

அப்போது தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒருவன் தண்டவாள இரும்பை கழற்றிக் கொண்டிருப்பதை இவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அந்த இடத்தை அண்மிக்க, அவன் அந்த இரும்பை கழற்றிய வண்ணமே இருக்கின்றான்!

இவர் யாரது என்ற கேட்டுக் கொண்ட அருகில் சென்ற போதும் அவன் திரும்பி பாராது தண்டவாள இரும்பை கழற்றிக் கொண்டே இருக்கிறான்.

கோபம் கொண்ட உத்தியோகஸ்தர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தனது வலது கையால் அவனை தாக்கியதை அடுத்து அங்கு இரும்பை கழற்றிக் கொண்டிருந்த அவன் தீடீரென மறைந்து விட்டான்!

இவர் தனது சக்தியை பயன்படுத்தி தாக்கி வேகம் தனது வலது கை இரும்பு பாலத்திலேயே மோதியுள்ளது.

அன்று பாதிக்கப்பட்ட கை இன்று வரை செயழிலந்தே காணப்படுகிறது.

இன்று அவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது!
0 கருத்துகள்

திங்கள், 2 மார்ச், 2009

வேனை நிறுத்திய பெண்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 2:44 PM

அன்று ஒரு நாள் நானும் கிரிஸ்த்தவ மதகுரு ஒருவரும் நண்பரொருவரை சந்தித்த விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அது ஒரு அமைதியான வீதி ஆள் நடமாட்டமே இல்லாத வீதி. நாங்கள் செல்லும் போது யாரும் இருக்கவில்லை அந்த வீதியில்!

தேவாலயத்தில் நடைபெற்ற விடயங்களைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டே வேனில் வந்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது ஒரு பெண் கையில் குழந்தையுடன் எங்களுடைய வானில் ஏற கையை நீட்டினாள்.

மிகவும் வேகமாக பயணித்துக் கொண்டிருந்ததனால் வேனை நாங்கள் நிறுத்தவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் மற்றுமொரு இடத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நாங்கள் பயணித்த வேனிற்கு கையை நீட்டினாள் செய்வதரியாது மதகுருவும் வேனை நிறுத்தினார்.

பாவம் என்று சொல்லி வேனின் பின் ஆசனத்தில் இருத்திக் கொண்டார் அந்த பெண்ணை!

சிறிது தூரம் சென்றதும் மதகுருவின் உடம்பு வியர்த்துக் கொட்டியது. நானும் ஆச்சரியத்துடன் என்னவென்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று கூறிய அவர் தயவுசெய்து பின்னால் திரும்பாதே என்றார். அவ்வாறு சொல்லிக் கொண்டே வாகனத்தை செலுத்தினார்.

வேன் கட்டுப்பாட்டை இழப்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

நானும் பின்னால் திரும்பாமல் வேனின் முன் கண்ணாடியில் மெதுவாகப் பார்த்தேன்...

அப்போது, பின்னால் குழந்தையுடன் அமர்ந்திருந்த அந்த பெண் குழந்தையை கடித்து உண்ணுவதை என் கண்ணால் கண்டேன்.

நான் கண்டு ஒரு சில விநாடிகளில் வேன் தீடீரென பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

அவ்வளவுதான் தெரியும். அடுத்த நாள் காலை வேனில் பார்த்தால் ஒன்றுமே இல்லை. கண்ணால் கண்ட சாட்சியத்தை பொய்யென்றோ பிரம்மை என்றோ என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
0 கருத்துகள்

வியாழன், 26 பிப்ரவரி, 2009

சரியாக அதிகாலை 3.30 மணி!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 8:16 AM

அதிகாலை 3.15 மணி, நிறுவனத்திற்கு நான் வேலைக்குவரும் நேரம், நான் வேலைக்குவரும் போது நிறுவனத்தில் யாரும் இல்லை. நான் மாத்திரமே! ஏனையோர் வேளைக்கு வருவது அதிகாலை 5 மணியளவில்.

நான் நிறுவனத்தினுள்ளே வந்ததும் முதலில் யாரும் இரவு நிறுவனத்தில் தங்கியிருக்கிறார்களா என பார்ப்பது வழக்கம்.

அன்றும் அதேபோன்று பார்த்தேன்! யாரும் இல்லை!

வேலைக்கு வந்த நான் கணனியில் அமர்ந்து எனது வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

சரியாக அதிகாலை 3.30 மணி, எனது அருகாமையிலுள்ள அறையில் யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

உடனே எழுந்து சென்று பார்த்தேன்! யாரும் இல்லை.

சரி அது எனது நினைவாக இருக்கும் என நினைத்து கொண்டு மீண்டும் எனது இடத்திற்கு சென்று எனது வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

மீண்டும் அதே பெண்ணின் குரல். ஆனால் அப்போது ஒரு சிறிய மாற்றம், அந்த பெண்ணுடன் இன்னுமொருவர் உரையாடுவது போல எனது காதுகளுக்கு கேட்டது.

மீண்டும் எழுந்து சென்று பார்த்தேன்! அப்போதும் யாரும் இல்லை!
அந்த நேரம் தான் மனதில் தோன்றியது. நினைவல்ல நிஜம் என்று!
அப்போது எனக்கு தெரியும் நிச்சயம் எனக்கு ஒருவர் தனது விளையாட்டை ஆரம்பிக்கிறார் என்று. சென்றேன் மீண்டும் எனது இடத்திற்கு.

சென்ற நான் எனது அருகிலிருந்து வானொலி பெட்டியின் சத்தத்தை சற்று அதிகரித்து வைத்தேன். எனது வேளைகளை நான் செய்து கொண்டிருந்தேன்!

மீண்டும் அதே குரல். நான் அதை பொருட்படுத்தவில்லை. எனது வேலைகளை செய்து கொண்டிருந்தேன்! அந்த குரலின் சத்தம் நேரம் செல்ல செல்ல அதிகரித்து கொண்டே செல்கிறது.

சுமார் 15 நிமிடங்கள் இருந்த குரலை கேட்ட நான்! மீண்டும் அந்த அறையின் வாசலுக்கு சென்றேன்! அறையின் உள்ளே செல்லவில்லை!

நான் அந்த இடத்திற்கு சென்றதும் சத்தம் இல்லை! சுமார் 5 நிமிடங்கள் மட்டும் இருந்த இடத்திலிருந்தே பார்த்து கொண்டிருந்தேன்! யாரும் இல்லை!

மீண்டும் நான் எனது இடத்திற்கு சென்று எனது வேலைகளை ஆரம்பித்தேன்! தீடீரென வித்தியாசமான சத்தம்!

உடனே அந்த அறையின் பக்கம் திரும்பி பார்த்தேன்! அந்த அறைக்கு வெளியில் ஒரு கணனி உள்ளது. அதற்கு பின்னால் ஒரு யன்னல் துணி உள்ளது.

அந்த துணி காற்றுக்கு வீசுப்படுவது போல வீசு பட்டு, மேலே சென்று நின்று கொண்டது. யாரோ அந்த துணியை பிடித்து வைத்துள்ளது போல, அப்படி நிற்கின்றது.

உடனே எனது இடத்திலிருந்து எழுந்து அந்த துணியை பாய்ந்து என் பக்கம் இழுத்தேன்! நான் துணியை இழுத்ததன் பின்னர் ஒரு சத்தம் என் பின்னால் சென்றது.

என் பின்னால் சென்ற சத்தத்தை உணர்ந்த நான்! பின்னால் திரும்பி பார்க்க வில்லை! எனக்கு தெரியும் நான் பின்னால் திரும்பினால் எனக்கு எதாவது நிச்சயம் நடக்கும் என!

அப்படியே சில நிமிடங்கள் இருந்த இடத்திலேயே நின்று, அப்படியே என் இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டேன், அன்று அந்த சத்தம் அப்படியே அமர்ந்து விட்டது.

அந்த பின்னர் நான் எனது வேலைகள் செய்து முடித்து விட்டு. அருகிலுள்ள வீடுகளில் இது என்னவென விசாரித்த போது!

சில வருடங்களுக்கு முன்னர் எமது நிறுவனத்திற்கு அருகிலுள்ள இருவர் காதலித்துள்ளதாகவும், அவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததினால், அந்த யுவதி தன்னை தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும், அதன் பின்னர் காதலனும் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அப்போதே நான் புரிந்து கொண்டேன்! முதலில் எனக்கு கேட்ட குரல் தீயிட்டுக் கொண்ட பெண்ணினுடையதும், அவள் பேசி கொண்டிருந்தது அவளுடைய காதலனிடமும் என!

அதன் பின்னர் இதுவரை எனக்கு அந்த சத்தம் மீண்டும் கேட்கவில்லை!
1 கருத்துகள்
புதிய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ▼  செப்டம்பர் (1)
      • இப்படியும் ஆவி உண்டு!
    • ►  ஆகஸ்ட் (3)
      • பெண்ணின் நடமாட்டம்!
      • ஆவி தள்ளிய வேன்!
      • பாதையின் முடிவில் புதைக்குழி!
    • ►  ஜூலை (1)
      • மைக்கல் ஜெக்சனின் ஆவி!
    • ►  ஏப்ரல் (1)
      • தனியே யாரும் செல்லாத பாதை!
    • ►  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)
      • சரியாக அதிகாலை 3.30 மணி!

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ▼  செப்டம்பர் (1)
      • இப்படியும் ஆவி உண்டு!
    • ►  ஆகஸ்ட் (3)
      • பெண்ணின் நடமாட்டம்!
      • ஆவி தள்ளிய வேன்!
      • பாதையின் முடிவில் புதைக்குழி!
    • ►  ஜூலை (1)
      • மைக்கல் ஜெக்சனின் ஆவி!
    • ►  ஏப்ரல் (1)
      • தனியே யாரும் செல்லாத பாதை!
    • ►  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)
      • சரியாக அதிகாலை 3.30 மணி!
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com